Friday, September 05, 2014
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
1986–ம் ஆண்டிலிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. யானைகள் காடுகளில் 18 மணி நேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். கோவில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்கவிடாமல் வளர்க்கின்றனர்.
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவை துன்புறுத்தப்படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோவிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
யானைகள் 10 வயது வரையில் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் குட்டிகளை உடனடியாக தாயிடம் இருந்து பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். யானைகள் துன்புறுத்தல் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் அவற்றை உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள பொருட்களை அவற்றின் மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஆசிய யானைகள் அழியும் நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோவில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக்கூடாது என உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர், முதன்மை வனப் பாதுகாவலர், விலங்கின வதை தடுப்பு நல அமைப்பு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்
1986–ம் ஆண்டிலிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. யானைகள் காடுகளில் 18 மணி நேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். கோவில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்கவிடாமல் வளர்க்கின்றனர்.
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவை துன்புறுத்தப்படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோவிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
யானைகள் 10 வயது வரையில் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் குட்டிகளை உடனடியாக தாயிடம் இருந்து பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். யானைகள் துன்புறுத்தல் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் அவற்றை உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள பொருட்களை அவற்றின் மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஆசிய யானைகள் அழியும் நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோவில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக்கூடாது என உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர், முதன்மை வனப் பாதுகாவலர், விலங்கின வதை தடுப்பு நல அமைப்பு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment