Sunday, September 14, 2014
இது குறித்த விவரம்:
உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுகந்தி. இவர், சம்பவ தினமான வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுகந்தியின் வாயை பொத்தி அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகந்தியை காப்பாற்றி தாக்குதல் நடத்தியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் காவல்துறையில் எழுத்துமூலம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், உடுமலை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தான் செவியலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்தியவர் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவிலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்திய சுப்பிரமணியத்தை கைது செய்யாத போலீஸாரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை டிஎஸ்பி பிச்சை, ஆய்வாளர் தவமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், சுப்பிரமணியத்தை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பி.ஆனந்தராஜ், மா.பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சனிக்கிழ மை மாலை சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment