Sunday, September 14, 2014
இது குறித்த விவரம்:
உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுகந்தி. இவர், சம்பவ தினமான வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுகந்தியின் வாயை பொத்தி அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகந்தியை காப்பாற்றி தாக்குதல் நடத்தியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் காவல்துறையில் எழுத்துமூலம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், உடுமலை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தான் செவியலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்தியவர் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவிலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்திய சுப்பிரமணியத்தை கைது செய்யாத போலீஸாரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை டிஎஸ்பி பிச்சை, ஆய்வாளர் தவமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், சுப்பிரமணியத்தை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பி.ஆனந்தராஜ், மா.பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சனிக்கிழ மை மாலை சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment