Monday, September 15, 2014
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்ம சுந்தரி துரைசாமியை ஆதரித்து காமாட்சிபுரம் 5வது வார்டு, குடியிருப்பு பகுதி மெயின் வீதியில் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம், அங்கமுத்து, ஜல்லிபட்டி ராமசாமி, இருகூர் துரைசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து, ஆகியோர் வீடு,வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைதேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.தங்கராசுவை ஆதரித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பஸ் நிலையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கோவை மாவட்ட செயலாளரும்,அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ், சூலூர் ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு என்கிற பாலசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் குட்டியப்பன்,சூலூர் அங்கமுத்து , கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்,தொகுதி செயலாளர் லிங்கசாமி, நகர நிர்வாகிகள் போலீஸ் கந்தசாமி, வழக்கறிஞர் கந்தநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment