Wednesday, September 10, 2014
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது அமராவதி. இங்குள்ள பொதுமக்கள்
இன்று அதிகாலை தங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையின் குறுக்கே
அங்கும் இங்குமாக உலா வருவதைப் பார்த்தனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment