Wednesday, September 24, 2014
மதுரை மாநகராட்சி பொறியாளரிடம் தன்னை உளவுத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி விசாரிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment