Monday, September 15, 2014
திருப்பூர் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22 மற்றும் 45–வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 22–வது வார்டில் 8 வாக்குப்பதிவு மையங்களும், 45–வது வார்டில் 12 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு 20 எந்திரங்கள் மற்றும் 10 ரிசர்வ் எந்திரங்கள் என மொத்தம் 30 எந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகர கமிஷனருமான அசோகன் தலைமையில், 22–வது மற்றும் 45–வது வார்டில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்து அதிகாரிகள் திருமுருகன், தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் உபயோகப்படுத்தப்படும் பென்சில், ரப்பர், மெழுகு, மை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment