Monday, September 01, 2014
பீஜிங்: சீனாவில் குடிபோதையில் ஏடிஎம்முக்கு சென்ற வாலிபர் அறைக்குள் சிக்கி கொண்டார். சீனாவின் கிழக்கே ஜிஜியாங் என்ற கடற்கரை பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள நகர் ஒன்றில் செங்கவோ என்ற 25 வயது வாலிபர் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நன்றாக குடித்துவிட்டு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதற்காக 3 முறை கார்டை வைத்து முயற்சி செய்தார். பணம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தவறான பாஸ்வேர்டு எண் போட்டதால், மெஷினில் கார்டு சிக்கிக்கொண்டது. மேலும் ஏடிஎம் அறையும் பூட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கண்ணாடியால் ஆன அறையை செங்கவோ கை யால் உடைக்க முயன்றார். முழு போதையில் இருந்ததால் அவரால் உடைக்க முடியவில்லை. கண்ணாடி அறைக்கு கீழே காற்று வரும் வழியாக செங்கவோ வெளியேற முயன்றார்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment