Saturday, October 04, 2014
வெள்ளகோவில்,
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் இருந்து தாராபுரம் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் 6–ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 6–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த மனித சங்கிலி போராட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தொடங்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1½ லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டாம். தொழிலாளர்களை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.
ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள், ஆகியோர் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களை திரட்டி கலந்து கொள்ள செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மளிகைகடை வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடை உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் சங்கத்தினர், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment