Saturday, October 04, 2014
ஈரோட்டில் கட்டிடத்துக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment