Saturday, October 04, 2014
ஈரோட்டில் கட்டிடத்துக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment