Tuesday, October 28, 2014
செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகளை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆர்.பழனிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்தனர்.
செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலர் சோமசுந்தரம், நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர் சின்னசாமி உள்ளி்டவர்களால் நடைபெற்ற மோசடி காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 20ம் தேதி முதல் மாநில அமைச்சர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல தடவை சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் நகைகள் சிக்கியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஏற்கனவே நகைகளைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த பிறகு, கூட்டுறவு துணைப் பதிவாளரும், சங்கத் தலைவரும் அந்த நகைகளை திரும்ப அளிக்காமல் மறுத்து வருகிறார்கள்.
கடன் பெற்றோர் உண்மையான அசல் அதற்குண்டான வட்டியை செலுத்த தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...

0 comments:
Post a Comment