Sunday, November 09, 2014
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment