Thursday, November 20, 2014
திருப்பூரில் நீர்நிலைகளைச் சுற்றியிருக்கும் தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்பதுடன், ஆற்றோரம் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர 21வது மாநாடு ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் செங்குந்தபுரம் தோழர் என்.ஆறுமுகம் நினைவரங்கில் (ராஜகணபதி மண்டபம்) நடைபெற்றது.
மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா செங்கொடியை ஏற்றி வைத்தார். பி.பாலன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். ஜி.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் முன்வைத்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் ஆற்றோரங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்யமல் அவர்களை அங்கிருந்து அகற்றக் கூடாது, ஜம்மனை மற்றும் வெள்ளியங்காடு பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும், முத்தையன் நகர், ஜம்மனை, சத்யாநகர் பகுதிகளில் ஓடை ஓரங்களில் தடுப்புச் சுவர் கட்டி பாதுகாப்பு வழங்க வேண்டும், குடிமனை பட்டா, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.
திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்குவதுடன், சிறப்பு நிதி ஒதுக்கி எல்ஆர்ஜி கல்லூரியை மேம்படுத்த வேண்டும், டவுன்ஹால் அரங்கை வியாபார நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்களை நகரில் கட்டுப்படுத்த வேண்டும், பெண்களுக்கு தனிப் பேருந்துகள் இயக்க வேண்டும், செல்லாண்டியம்மன் துறை அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகரக்குழு
இம்மாநாட்டில் எம்.ராஜகோபால் மாநகரக்குழுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருடன் எஸ்.சுந்தரம், டி.ஜெயபால், பி.பாலன், ஆறுக்குட்டி, கே.பொம்முதுரை, ஏ.சுப்பிரமணியம், ஜி.மூர்த்தி, ஏ.முருகசாமி, ஏ.ஷகிலா, ஜி.செந்தில்குமார், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.பானுமதி, டி.நவீன் லட்சுமணன் ஆகிய 14 பேர் மாநகரக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட மாநாடு பிரதிநிதிகளாக 3 பெண்கள் உள்பட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முடிவில் சி.முருகேஷ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment