Thursday, November 27, 2014
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக்
கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை
பெரியாற்றில் தண்ணீர் 142 அடியை எட்டியதற்கு ஐந்து மாவட்ட மக்கள் பென்னி
குயிக்கிற்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகர அ.தி.மு.க.வினர், முன்னாள் முதல்வர்
ஜெயலலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நேற்று மதுரையில் பொது கூட்டம்
நடத்தினர்.அந்த கூட்டத்தில், அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது,
''இன்று தென்மாவட்ட மக்கள் மகிழும் வகையில் முல்லைப்பெரியாற்றின் நீர்
வைகையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஜெயலலிதாதான்.
கருணாநிதி இந்தப் பிரச்னைக்காக துரும்பைகூட எடுத்து போடவில்லை. ஆனால்,
இப்போதோ கேரளாவுக்கு நன்மை செய்வது போல அறிக்கைகள் விட்டுக்
கொண்டிருக்கிறார்.

மக்களின் முதல்வர் என்று
ஜெயலலிதாவை நாங்கள் குறிப்பிடுவதை சில ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.
மக்கள்தான் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தவர்கள். ஜெயலலிதா 5
ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டுமென்றுதான் மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள்.
இப்போது ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்கியது மக்களா? மக்கள் கொடுத்த
அதிகாரம் இன்னும் ஒன்றரை வருடத்திற்கு உள்ளது.அப்படி என்றால், ஜெயலலிதாவை
மக்களின் முதல்வர் என்று சொல்வதில் என்ன தவறு? நான் சட்டத்திற்குள்
செல்லவில்லை. மக்களின் முதல்வர் என்று சொல்வதை, கிண்டல் செய்ததற்காக இதை
சொல்கிறேன்" என்றார். தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனையில் பெயர் எடுக்க
வேண்டும் என்ற நோக்கத்தோடு வட நாட்டில் இருந்து வந்து தற்போது மத்தியில்
ஆட்சியை பிடித்த கட்சியெல்லாம் மக்கள் செல்வாக்கு இருப்பது போன்ற பிரம்மையை
ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அவை லெட்டர் பேடு
கட்சியாகத்தான் உள்ளது என சாடினார் . அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது,
''ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் மாபெரும் கூட்டத்தை
நடத்தினார்கள். இது நாம் நடத்தும் நன்றி கூட்டம். தாய்க்கு பிள்ளைகள்
எடுக்கும் விழா" என்றார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பின்னப்பட்ட
சூழ்ச்சிகளை முறியடித்து தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பார் என
தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment