Thursday, November 27, 2014
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை
தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை
மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் தளபதி வரவேற்றார்.கூட்டத்தில்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது
அவர்,மதுரையில் இன்று காலை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள்
மட்டுமல்லாமல் கல்லூரி மாணவ– மாணவிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள்
என்று பல்வேறு தரப்பினரிம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதுதான் அ.தி.மு.க.
அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்தது. தி.மு.க. ஆட்சி
வேண்டும் என்று 80 சதவீதம் பேர் நினைக்கின்றனர். அடுத்த ஆண்டு இது
கண்டிப்பாக 100 சதவீதமாக மாறும்.தி.மு.க. பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளது.
எத்தனை தோல்வி வந்தாலும், தி.மு.க. தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள்.
யாராலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. தி.மு.க.வை போன்று வெற்றி பெற்ற
கட்சியும் கிடையாது. தி.மு.க.வை போன்று தோல்வி அடைந்த கட்சியும்
கிடையாது.வெற்றி பெறும்போது வெறிகொண்டு அலையக்கூடாது. தோல்வியை கண்டு
துவண்டுவிடக்கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை உறுதியோடு ஏற்றுக் கொண்டு
தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற
தேர்தலில் தி.மு.க. தோற்றுவிட்டதாக கூறுகிறார்கள். உண்மையிலேயே தோற்றது
நாம் அல்ல, தமிழக மக்கள் தான். தவறு செய்து விட்டதை தற்போது தான் மக்கள்
உணருகிறார்கள்.தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில்
தொழில் தொடங்க வந்த வெளிநாட்டினர் தற்போது வேறு மாநிலங்களை தேர்வு செய்ய
தொடங்கி விட்டனர். தி.மு.க. ஆட்சியின்போது 50–க்கும் மேற்பட்ட தொழிற்
சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர்
வேலைவாய்ப்பு பெற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தொழிற்சாலை
தொடங்கப்பட்டன என்று ஓ.பன்னீர்செல்வத்தால் கூற முடியுமா?என மு.க.ஸ்டாலின்
கூறினா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment