Thursday, November 27, 2014
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை
தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை
மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் தளபதி வரவேற்றார்.கூட்டத்தில்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது
அவர்,மதுரையில் இன்று காலை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள்
மட்டுமல்லாமல் கல்லூரி மாணவ– மாணவிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள்
என்று பல்வேறு தரப்பினரிம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதுதான் அ.தி.மு.க.
அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்தது. தி.மு.க. ஆட்சி
வேண்டும் என்று 80 சதவீதம் பேர் நினைக்கின்றனர். அடுத்த ஆண்டு இது
கண்டிப்பாக 100 சதவீதமாக மாறும்.தி.மு.க. பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளது.
எத்தனை தோல்வி வந்தாலும், தி.மு.க. தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள்.
யாராலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. தி.மு.க.வை போன்று வெற்றி பெற்ற
கட்சியும் கிடையாது. தி.மு.க.வை போன்று தோல்வி அடைந்த கட்சியும்
கிடையாது.வெற்றி பெறும்போது வெறிகொண்டு அலையக்கூடாது. தோல்வியை கண்டு
துவண்டுவிடக்கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை உறுதியோடு ஏற்றுக் கொண்டு
தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற
தேர்தலில் தி.மு.க. தோற்றுவிட்டதாக கூறுகிறார்கள். உண்மையிலேயே தோற்றது
நாம் அல்ல, தமிழக மக்கள் தான். தவறு செய்து விட்டதை தற்போது தான் மக்கள்
உணருகிறார்கள்.தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில்
தொழில் தொடங்க வந்த வெளிநாட்டினர் தற்போது வேறு மாநிலங்களை தேர்வு செய்ய
தொடங்கி விட்டனர். தி.மு.க. ஆட்சியின்போது 50–க்கும் மேற்பட்ட தொழிற்
சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர்
வேலைவாய்ப்பு பெற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தொழிற்சாலை
தொடங்கப்பட்டன என்று ஓ.பன்னீர்செல்வத்தால் கூற முடியுமா?என மு.க.ஸ்டாலின்
கூறினா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment