Monday, December 01, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூளவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இந்த பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதுஅருந்தும் குடிமகன்கள் சிலர் போதையில் சாலையோரம் கிடப்பதும், தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத நிலையில் அதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், பூளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் நியமிக்கக்கோரியும் பூளவாடி நால்ரோட்டில் பா.ஜ.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூளவாடி கிளை செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் குருசாமி, நாகராஜன், சோமசுந்தரம், ரமேஷ் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment