Thursday, December 04, 2014
9–ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அவினாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரின் வீட்டாரும் காதலர் ஜோடிகளை அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை கருவலூரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக தகவல் கிடைத்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணமகளுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் இருவீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். மாணவியும் தான் தொடர்ந்து படிப்பதை விரும்பவதாக தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டு சென்றனர். அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment