Thursday, December 04, 2014
9–ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அவினாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரின் வீட்டாரும் காதலர் ஜோடிகளை அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை கருவலூரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக தகவல் கிடைத்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணமகளுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் இருவீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். மாணவியும் தான் தொடர்ந்து படிப்பதை விரும்பவதாக தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டு சென்றனர். அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment