Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3–ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கரட்டுப்புதூர் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சட்டப்பேரவை விதி எண்.110–ன் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான விடுதியுடன் கூடிய தொழில் பயிற்சி மையத்தை நமது மாவட்டத்தில் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2 கோடியே ஆயிரம் மதிப்பில் 1,733 பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் பராமரிப்பு தொகையும், ரூ.8 லட்சம் மதிப்பில் 265 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ரூ.2 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு வங்கிக்கடன் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, காதுக்கு பின் பொருத்தும் நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், காலிபர் ஆகியவையும், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் ஊன்றுகோல், கருப்புக்கண்ணாடி, பேசும் கைக்கடிகாரம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உறுப்பெருக்கி மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவாச்சலம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனர் தங்கராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment