Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திருப்பூர் சார் டாக்டர் கே.செந்தில்ராஜ் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பறவை காய்ச்சல் நோயினால் எந்த வித பறவைகளுக்கும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம், தாலுகா, ஊராட்சி அளவில் இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னாறு பகுதியில் கேரள மாநில எல்லை உள்ளது. அந்த பகுதியில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்வதற்கும், இந்த நோய் குறித்து கண்டறிவதற்கும் காவல்துறை, சிறப்பு நோய் தடுப்புக் குழு ஆகியவற்றால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ணைகளை சுற்றிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு கிருமி நாசினி மருந்து போன்றவற்றை தெளிக்க ஏற்பாடு செய்து இந்த நோய் வராமல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோழிகளை 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடு செய்து இறைச்சியை உட்கொள்ள வேண்டும்.
இந்த நோய் தடுப்பு பணிக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு குழுக்கள் என அதிவிரைவு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறியான கொண்டை கருகுதல், சளி வடிதல், ரத்தக் கட்டு, தீவனம் எடுக்காமலிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகை ரத்தினம், அனைத்து தாசில்தார்கள், கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment