Wednesday, December 31, 2014
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட சீனா முடக்கி விட்டதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த வேளையில், அதை முடக்குவதற்கான நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் 'ஜி மெயிலின்' பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம், டியானமென் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் 25 ஆம் ஆண்டு நிகழ்வுகள் அனுசரிக்கப்படுவதற்கு முன்னர், கூகிள் நிறுவனத்தின் மீது சீனா பல தடைகளை விதித்திருந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவில் இணையதள தணிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக கூகிள், ஃபேஸ்புக், டிவிட்டார் மற்றும் இதர வெளிநாட்டு இணையதள சேவைகள் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment