Friday, January 02, 2015
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 2–வது மண்டல அலுவலகத்தில் நடந்தது. மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிஆணையர் வாசுகுமார் வரவேற்றார். கூட்டத்தில் 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:–
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment