Monday, January 12, 2015
திருப்பூரில் காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் இறந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த ஆப்செட் தொழிலாளி மயில்சாமியின் இரண்டாவது மகள் பிருந்தா (2). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதேபோல், சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் சுபலட்சுமி (6) டிசம்பர் 27-ம் தேதி உயிரிழந்தார். இவ்விரு குழந்தைகளும் டெங்கு பாதிப்பால்தான் இறந்ததாக தகவல் பரவியதால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகர சுகாதார பிரிவு சார்பில் கடந்த இரு நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரு நாள்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு அறிகுறி இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் கொசு மருந்துகள் தெளிப்பு, தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் தூர்வாறும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகர சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர் முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment