Monday, January 12, 2015
திருப்பூரில் காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் இறந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த ஆப்செட் தொழிலாளி மயில்சாமியின் இரண்டாவது மகள் பிருந்தா (2). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதேபோல், சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் சுபலட்சுமி (6) டிசம்பர் 27-ம் தேதி உயிரிழந்தார். இவ்விரு குழந்தைகளும் டெங்கு பாதிப்பால்தான் இறந்ததாக தகவல் பரவியதால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகர சுகாதார பிரிவு சார்பில் கடந்த இரு நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரு நாள்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு அறிகுறி இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் கொசு மருந்துகள் தெளிப்பு, தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் தூர்வாறும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகர சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர் முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment