Monday, January 12, 2015
பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பல்லடம் எம்.சி.திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் வி.காளியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சா.புருசோத்தமன், நகரச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி முறையை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முன்னதாக, மாவட்டத் தலைவர் மாதப்பூர் சாமிநாதன் வரவேற்றார். இதில் மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் சதாசிவம், மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் கி.மாதவன், மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் பொன்நடராசு கவுண்டர், கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment