Thursday, January 22, 2015
ஆணாகப் பிறந்த ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஹான்னா விண்டர் போர்னே (27) என்பவர் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் படிப்பு படித்து வந்துள்ளார். பின்னர் தனது 15ஆவது வயதில் கல்லூரியின் ஆயுதப்படை பிரிவில் சேர்ந்துள்ளார்.
பின்னர் ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார்.பருவம் எய்தும் காலகட்டத்தில் ஆணாகப் பிறந்த ஹான்னா தன்னை பெண்ணாக உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார்.
ஆண் ஹான்னா..
அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் பணிபுரிந்தபோது தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஹான்னா சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ளார். தற்போது அவர் ராயல் எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரப் பொறியாளர்களாக பணிபுரியும் 100 ராணுவத்தினரின் மாற்றுப் பாலின தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
பெண் ஹான்னா..
இது குறித்து ஹான்னா விண்டர்போர்னே கூறுகையில், ”நான் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.
நடித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியே என்னால் வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் தற்போது எந்த பயமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
0 comments:
Post a Comment