Friday, January 02, 2015
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கோர்ட்டு வீதி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக ரெயில்வே சுரங்க பாலம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பாலங்கள் கட்டுமான பணி முடிவடையும் வரை ஊத்துக்குளி ரோட்டில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக சென்று ஸ்ரீசக்தி தியேட்டரை அடைந்து யூனியன் மில் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதுபோல் ஊத்துக்குளி இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 2–வது ரெயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment