Friday, February 27, 2015
முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்!" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக மார்ச் 1ம் தேதி ஞாயிறன்று மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா நடைபெறுகிறது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறும் என்று வரவேற்புக்குழுத் தலைவர் அரிமா எம்.ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கருப்பராயன் கோயில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள், பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் மற்றும் லிங்க்ஸ் சௌகத் அலி, ஆர்.ஏ. ஏஜென்சிஸ் கே.ஜெயபால், வி.டி.சுப்பிரமணியம், கீதாஞ்சலி கோவிந்தப்பன், பிரிண்டிங் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டை தமிழக பண்பாட்டு தளத்தில் முற்போக்கு திசைவழியில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு குழுக்களின் பணிகள் பற்றி விவாதித்து, வரக்கூடிய நாட்களில் பணிகளை முனைப்புடன் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது.
இதில் கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக மார்ச் 1ம் தேதி முதல் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் வரவேற்புக்குழு அலுவலகம் முழு நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் தமுஎகச அமைப்பினர் மட்டுமின்றி கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் செயல்படும் அனைத்து படைப்பாளிகளும் பங்கேற்கும்படி வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
0 comments:
Post a Comment