Friday, February 27, 2015
முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்!" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக மார்ச் 1ம் தேதி ஞாயிறன்று மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா நடைபெறுகிறது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறும் என்று வரவேற்புக்குழுத் தலைவர் அரிமா எம்.ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கருப்பராயன் கோயில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள், பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் மற்றும் லிங்க்ஸ் சௌகத் அலி, ஆர்.ஏ. ஏஜென்சிஸ் கே.ஜெயபால், வி.டி.சுப்பிரமணியம், கீதாஞ்சலி கோவிந்தப்பன், பிரிண்டிங் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டை தமிழக பண்பாட்டு தளத்தில் முற்போக்கு திசைவழியில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு குழுக்களின் பணிகள் பற்றி விவாதித்து, வரக்கூடிய நாட்களில் பணிகளை முனைப்புடன் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது.
இதில் கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக மார்ச் 1ம் தேதி முதல் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் வரவேற்புக்குழு அலுவலகம் முழு நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் தமுஎகச அமைப்பினர் மட்டுமின்றி கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் செயல்படும் அனைத்து படைப்பாளிகளும் பங்கேற்கும்படி வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
0 comments:
Post a Comment