Thursday, February 26, 2015
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பால்குட ஊர்வலம், சர்வ சமய பிரார்த்தனை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாலை கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 19 ஆண், 12 பெண் குழந்தைகள் என மொத்தம் 31 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு நாளை (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடக்கும் இந்த விழாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்குகிறார். பகுதி செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கிறார். விழாவில் மேயர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜன், துணை மேயர் திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா மற்றும் பகுதி, தொகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் முதல்வர் அம்மா பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் தங்கமோதிரம் வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.க்கள், பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
0 comments:
Post a Comment