Tuesday, February 17, 2015
குடிமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்க்கும் விவசாயிகள்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மக்காச்சோளம் மட்டுமின்றி கிணற்று பாசனம் மூலம் சின்னவெங்காயம் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொங்கல் நகரம், குடிமங்கலம், இலுப்பநகரம், பெதப்பம்பட்டி, அணிக்கடவு பூளவாடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்த பகுதிகளில் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்த்து விளை நிலங்களில் வெங்காய பட்டறைகள் அமைத்து இருப்பு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இங்கு விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 35 நாட்களுக்கு பிறகு அதனை தனியாக பிரித்து நடவு செய்தும் மற்ற மாதங்களில் முழு வெங்காயமாக நடவு செய்தும் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி கோபிநாதன் கூறியதாவது:–
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 1¼ கிலோ விதை தேவைப்படுகிறது. 1 கிலோ விதை ரூ.3 ஆயிரத்து 500–க்கு வாங்கி சாகுபடி செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு பாத்தி அமைக்க ரூ.2 ஆயிரமும், நடவு செய்ய ரூ.4 ஆயிரமும், மருந்து தெளிக்க ரூ.7ஆயிரமும், களைஎடுக்க ரூ.4ஆயிரமும், உரமிடுதல் ரூ.8 ஆயிரமும் மற்றும் அறுவடைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...

0 comments:
Post a Comment