Tuesday, February 17, 2015
குடிமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்க்கும் விவசாயிகள்
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மக்காச்சோளம் மட்டுமின்றி கிணற்று பாசனம் மூலம் சின்னவெங்காயம் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொங்கல் நகரம், குடிமங்கலம், இலுப்பநகரம், பெதப்பம்பட்டி, அணிக்கடவு பூளவாடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்த பகுதிகளில் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்த்து விளை நிலங்களில் வெங்காய பட்டறைகள் அமைத்து இருப்பு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இங்கு விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 35 நாட்களுக்கு பிறகு அதனை தனியாக பிரித்து நடவு செய்தும் மற்ற மாதங்களில் முழு வெங்காயமாக நடவு செய்தும் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி கோபிநாதன் கூறியதாவது:–
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 1¼ கிலோ விதை தேவைப்படுகிறது. 1 கிலோ விதை ரூ.3 ஆயிரத்து 500–க்கு வாங்கி சாகுபடி செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு பாத்தி அமைக்க ரூ.2 ஆயிரமும், நடவு செய்ய ரூ.4 ஆயிரமும், மருந்து தெளிக்க ரூ.7ஆயிரமும், களைஎடுக்க ரூ.4ஆயிரமும், உரமிடுதல் ரூ.8 ஆயிரமும் மற்றும் அறுவடைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...

0 comments:
Post a Comment