Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலை அரசு விழா மற்றும் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலும், அழைத்தாலும் தாமதமாக தகவல்கள் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை மற்றும் உரிமைகளை மறுப்பதாகவே இதை கருதுகிறோம். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் கீழ்கண்ட தீர்மான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும் உரிய முக்கியத்துவத்தோடு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லி கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல் நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும், அரசு விழாக்களை ஆளும் கட்சி விழாக்களாக மாற்றி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment