Thursday, March 26, 2015
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் உற்பத்தி செய்த பொருள்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி திருப்பூரில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட தொழில் மையம் சார்பில் அனுப்பர்பாளையம் எஸ்.எம்.திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி தொடங்கி வைத்தார்.
இதில், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்கியுள்ள பயனாளிகளின் உற்பத்திப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், ஹாலோ பிளாக், சாம்பல் கற்கள், பேப்பர் கப், தேங்காய் எண்ணெய், உலோகப் பாத்திரங்கள், பாக்கு மட்டை தட்டுகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், கணினி இணையதள மையம், அழகு நிலையம் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகின்றன.
இதில், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னராமசாமி பேசியது:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் தொடங்கப்படும் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 25 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படும். நகர்புற பகுதிகளில் தொடங்கப்படும் வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு மூலமாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், 2014-15ஆம் ஆண்டில் 48 பேருக்கு ரூ. 1.95 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பி.ரங்கசாமி, உதவிப் பொறியாளர் ஜி.திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வரை நடைபெற உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment