Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேலை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு விழாக்கள், அரசுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் அழைக்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்படுகிறார். அப்படி, அழைத்தாலும் தாமதமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை, உரிமைகளை மறுப்பதாகவே இது கருதப்படுகிறது. இத்தகைய செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதாகும்.
எனவே, வரும் காலங்களில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும், உரிய முக்கியத்துவத்தோடு சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல்நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment