Saturday, March 28, 2015
திருப்பூர் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையை பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் கல் குவாரியில் கொட்டுவதற்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அனுமதி வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் இருந்தும் நாள்தோறும் சுமார் 400 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, மாநகரைச் சுற்றியுள்ள பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுகாதாரச் சீர்கோடு ஏற்படுவதாகக் கூறி, சுற்றுப் பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பையை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தற்போது, குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக் குழிகளும் நிரப்பும் நிலையில் உள்ளன. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் அருகே, தமிழக அரசால் நடத்தப்பட்டு, கைவிடப்பட்ட கல் குவாரியில் குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தாளம்பாளையம் கல் குவாரியை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அதன், அருகில் குடியிருப்புகள் இல்லாததால், மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை இந்த கல் குவாரியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.
அதேபோல், நல்லூர் அருகே தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட, கைவிடப்பட்ட கல் குவாரியையும் ஆட்சியர் பார்வையிட்டார். அதிலும், மாநகராட்சி குப்பையை கொட்டுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர்கள் சிவக்குமார் (திருப்பூர் வடக்கு), கண்ணன் (திருப்பூர் தெற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment