Saturday, March 28, 2015
திருப்பூர் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையை பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் கல் குவாரியில் கொட்டுவதற்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அனுமதி வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் இருந்தும் நாள்தோறும் சுமார் 400 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, மாநகரைச் சுற்றியுள்ள பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுகாதாரச் சீர்கோடு ஏற்படுவதாகக் கூறி, சுற்றுப் பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பையை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தற்போது, குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக் குழிகளும் நிரப்பும் நிலையில் உள்ளன. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் அருகே, தமிழக அரசால் நடத்தப்பட்டு, கைவிடப்பட்ட கல் குவாரியில் குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தாளம்பாளையம் கல் குவாரியை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அதன், அருகில் குடியிருப்புகள் இல்லாததால், மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை இந்த கல் குவாரியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.
அதேபோல், நல்லூர் அருகே தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட, கைவிடப்பட்ட கல் குவாரியையும் ஆட்சியர் பார்வையிட்டார். அதிலும், மாநகராட்சி குப்பையை கொட்டுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர்கள் சிவக்குமார் (திருப்பூர் வடக்கு), கண்ணன் (திருப்பூர் தெற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
0 comments:
Post a Comment