Wednesday, April 15, 2015
திருப்பூர் மாநகராட்சியின் 41-ஆவது வார்டுக்கு உள்பட்ட சந்திராபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி 41-ஆவது வார்டுக்கு உள்பட்ட சந்திராபுரம் கிழக்கு, ஸ்ரீ பண்ணாரி அம்மன் நகர், ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் நகர், ராஜீவ்நகர் மேற்கு, இந்திரா நகர் கிழக்கு, 5-ஆவது வீதி, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல், சந்திராபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல் கூறியதாவது:
இப்பகுதியில் ரூ.40 லட்சத்தில் வடிகால் வசதி ஏற்படுத்த திட்டம் தயாராக உள்ளது. சந்திராபுரம் பகுதியில் கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும். இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment