Wednesday, April 15, 2015
தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டுமென கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சங்கத்தின் தாராபுரம் கோட்ட மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் பரமசிவம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை முறையாக விநியோகிக்க வேண்டும். தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால், விபத்தில் படுகாயமடைவோர் திருப்பூர், கோவை போன்ற அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் நிலை நிலவுகிறது. எனவே, எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டும்.
தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூனில் ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1.5 கோடி வருவாய் அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் நகரபகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், ஏலம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதைக் காரணம் காட்டி, கடந்த 11 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் நிலுவையிலுள்ள வாடகை தொகையை விரைந்து வசூல் செய்யவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment