Friday, April 10, 2015
இத்தாலிய நகரமான மிலனில் உள்ள நீதி அரண்மனை என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நீதிபதி ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டினை, மோசடி மற்றும் திவால் வழக்கு ஒன்றின் பிரதிவாதியே நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அந்த நீதிமன்ற விளாகத்தில் தஞ்சம் புகுந்து இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் ஏஞ்சலீனோ அல்ஃபானோ கூறினார்.
பின்னர் மிலனின் வடக்கு பகுதியில் அந்த துப்பாக்கிதாரி பிடிக்கபட்டதாகத் தெரிகிறது.
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழலில் அங்கிருந்து வழங்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இறங்கி ஓடினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது, மூன்றாவதாக இறந்து போன ஒருவருடைய சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் , ஆனால் அவர் எப்படி இறந்தார் எனத்தெளிவாகத் தெரியவில்லை எனவும் இத்தாலிய ஊடகம் ஒன்று கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment