Saturday, August 29, 2015
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வாரும் பணி கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. அங்குள்ள அமலை செடிகளை அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பொன்னன்குறிச்சி பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. 10 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 8 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டது. இதனால் அந்த இடங்களில் ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்தது. மணலை வெளியேற்றுவதற்காக ஏராளமான லாரிகளும் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து தலைவர் அருணாசலம், கவுன்சிலர் பொன்பாண்டி உள்ளிட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆற்றில் அள்ளப்படும் மணல் விபரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் மணல் அள்ளப்படும் விவரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலர் மூலம் கணக்கிடலாம் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மணல் அள்ளும் பணி நடந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 7 பிரிவுகளாக தூர்வாரும் பணி நடக்கிறது. முதல் பிரிவான அணை பகுதியில் 900 மீட்டர் பரப்பளவு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது 2, 3–வது பிரிவான 900 மீட்டர் முதல் 1,700 மீட்டர் வரையிலும் தூர்வாரும் பணி நடக்கிறது. பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 மாதங்களிலும், வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு ஆண்டுக்குள்ளும் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளது.
மழைக்காலத்துக்கு முன்னதாக அணையை தூர்வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், சிறப்பு அனுமதி பெற்று இரவு பகலாக தூர்வாரும் பணி நடைபெறும். அங்கிருந்து அள்ளப்படும் மணலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சேமித்து வைத்து, அரசு டெண்டர் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment