Saturday, August 29, 2015
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக
முதல்வர் அறிவித்த நான்காவது பைப் லைன் திட்டப் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இதில், சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தனியார் சிலர்
எதிர்ப்பு தெரிவித்ததாக மேயரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில்
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர்
ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் உள்ள ஒரு
தனியார் கட்டடத்தின் அருகே குழாய் பதிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த இடத்தை
பார்வையிட்டனர்.
அப்போது, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என
ஆவணங்களில் இருப்பது தெரியவந்ததால் அந்த இடத்தில் உடனடியாக குழிகளைத்
தோண்டி குழாய்களை பதிக்க மேயர் உத்தரவிட்டார். அதன்படி, பொக்லைன்
இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.
இதுகுறித்து மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாநகர மக்களின் தேவைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 282 கோடி
நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 90 சதவீத
பணிகள் முடிவடைந்துள்ளன. தனியார் ஒருவர் குழாய் பதிக்கவிடாமல் தடுத்தது
தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.
முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும்
வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு: ஆய்வுப் பணிகளின்போது,
நாம் தமிழர் என்ற வளாகத்தின் உரிமையாளர் மூன்றாவது பைப் லைனில் இருந்து
முறைகேடாக மூன்று இணைப்புகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment