Monday, August 17, 2015
தீபாவளி சீசன் முடிந்ததும் சில வாரங்களில் புது வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி பணிகள் மிகவும் மந்தமாக உள்ளது. இதுகுறித்து சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–
மார்ச் முதல் மே மாதம் வரை பட்டாசு ஆலைகளின் பிரதிநிதிகள், ஏஜெண்டுகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேம் போன்ற வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆர்டர்களை பெற்று பட்டாசு உற்பத்தி பணியினை தீவிரப்படுத்துவார்கள். இதன் உற்பத்தி ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
உற்பத்தி செய்த பட்டாசுகள் 70 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். மற்ற 30 சதவீத பட்டாசுகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 400–க்கும் அதிகமான பட்டாசு கடைகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திறந்து வைப்பார்கள்.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வெளி மாநில வியாபாரிகள் வருகை தராததால் உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சென்ற தீபாவளி சீசனில் எதிர்பார்த்த வியாபாரம் இருந்ததால் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது ஏராளமான பட்டாசுகள் ஆலைகளிலும், பட்டாசுகள் இருப்பு அதிகம் வைத்துள்ளதால் விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. தள்ளுபடியும் அதிகமாகலாம். இருந்தாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment