Monday, September 14, 2015
காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டியைச் சுற்றிலும்
ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக
உள்ளது. இங்கு, நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானிய வகைகள்
பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயம்
செய்யப்படுகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர்,
முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரிய கண்மாய் மூலம்
நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது.
இந்த கண்மாய்கள் நிறைந்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல்
விளைச்சல் இருக்கும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை
பொய்த்திருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள்
அவதிப்படுகின்றனர்.
இத்துடன், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வரத்துக்
கால்வாய்கள் தூர்வாராததால் தூர்ந்துபோயும் உள்ளதால், மழைநீரை சேமித்து
விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல்
மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், பெரும்பாலான விளைநிலங்கள்
மனையடிகளாக மாறியுள்ளன.
எனவே, இந்தப் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த
கம்பிக்குடி-சென்னம்பட்டி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி திட்டம்
உள்ளிட்டவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கர்
கூறியது: கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்ததால்
விளைச்சல் சரிவர இல்லை. கிணற்றுப் பாசனம் உள்ளவர்களும் நிலத்தடி நீர்
இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய வாங்கிய கடனை
அடைக்க முடியாமலும், பொருள்களை விளைவிக்க முடியாமலும் நஷ்டப்பட்டு
வருகிறோம்.
இந்தாண்டு மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள்
தூர்வாரப்படாததால், மழை நீரை சேமிப்பது கடினமே. எனவே, கண்மாய் மற்றும்
வரத்துக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment