Friday, September 25, 2015
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்கொலை நிகழ்ந்திருப்பதற்கான காரணம் என வெளிப்படையாக தெரிகிறது.
அவர் விசாரித்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் இது வரை கைது செய்யப்பட வில்லை. உள்ளூரில் இருக்கும் குற்றவாளியை கைது செய்யவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்பது தெரியவில்லை.
குற்றவாளி பலம் வாய்ந்த அரசியல் பிண்ணனியில் இருக்கலாம் என்பதும் கைது செய்யப்படாததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. முத்துகுமார சாமியை தொடர்ந்து தற்போது பல லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும் காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு நரபலி விசாரணையில் எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அச்சத்தை வர வழைத்துள்ளது. அரசு உடன்பட்டு உண்மைகளை வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் மக்களை முழு அளவில் சென்றடையாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். இதனால் சிவகாசியில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment