Tuesday, October 13, 2015
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமாக வேன் உள்ளது. இன்று காலை பள்ளி வேன் வழக்கமாக மாணவ–மாணவிகளை அழைத்துவர புறப்பட்டது. வேனை சிவஞானம் என்பவர் ஓட்டினார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங் குளத்துக்கு சென்ற வேன் அங்கிருந்து 70–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே டிரைவர் மெதுவாக வேனை ஓட்டி வந்தார். பொய்யாங்குளம் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் வந்தபோது ஈரமாக இருந்த மண் சரிந்தது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் உள்ளே இருந்த மாணவ–மாணவிகள் 38–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூக்குரலிட்ட அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாசில்தார் ரெங்கசாமி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment