Thursday, October 15, 2015
பல்லடத்தை அடுத்த சித்தம்பலத்தில் கூடுதல் பேருந்து வசதி வேண்டி அரசுப் பேருந்தை மாணவர்கள், கிராம மக்கள் புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பல்லடத்திலிருந்து சித்தம்பலம் வழியாக குள்ளம்பாளையம் வரை செல்லும் 7 ஏ நகரப் பேருந்தில் கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்தில் பல்லடம் வடுகபாளையத்திலேயே அதிகப்படியான பயணிகள் ஏறி விடுவதால் சித்தம்பலத்திற்கு பேருந்து வரும்போது பேருந்தில் ஏறமுடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். பேருந்தில் ஏற முடியாதவர்கள் ஆட்டோ, வேன் மூலமாக கூடுதல் கட்டணம் செலுத்தி கேத்தனூரில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பலமுறை சித்தம்பல கிராம மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், புதன்கிழமை காலை, சித்தம்பலத்திற்கு வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment