Thursday, December 17, 2015
இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களுக்கு எதிராக நடைபெறும் பெண் சிசுக் கொலை, குழந்தை திருமணம் வரதட்சணைக் கொடுமைகளை போன்ற சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் போராடி வருகின்றனர். இவ்வாறான சமூக அநீதிகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ஒன்று கூடிப் போராடும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2015-2016ம் ஆண்டிற்கு மாநில அளவில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1,00,000/- ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான அடிப்படை மதிப்பீடு மற்றும் தகுதிகள்:
1. அனைத்து சுய உதவிக்குழுக்களும் அரசால் உருவாக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.
2. சுய உதவிக்குழுக்கள் இணைந்து குறைந்தது 5 ஆண்டுகளாவது நிலைத்த தன்மையுடைனவாய் விண்ணப்பிக்கும் போது இருத்தல் வேண்டும்.
3. சமூக அநீதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும்.
4. சமூக அநீதிகளுக்கு எதிராக தனித்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் அடங்கும்.
- பொதுமக்கள் மத்தியில் சமூக அநீதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளித்தல்.
- வரதட்சனை, குழந்தை திருமணம் போன்ற தண்டனைக்குரிய செயல்களை எதிர்த்து கிராமத்தில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையோ அல்லது வெளியிலோ நடவடிக்கை எடுத்தல்.
- கிராம அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து சமூக அநீதிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல்.
எனவே தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 30.12.2015க்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்பவும். மேலும் தகவலுக்கு அலுவலக தொலைபேசி எண்:0461-2341282-ஐ தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment