Friday, December 18, 2015
கடந்த 4 நாட்களாக மழை இல்லாமல் இருந்த தூத்துக்குடியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் தூத்துக்குடி , முள்ளக்காடு, முத்தையாபுரம், புதுக்கோட்டை, மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் தெப்பகுளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுபோல் காய்கனி மார்க்கெட், பிரையண்ட் நகர் காவலர் குடியிருப்பு பகுதி போன்ற, அண்ணா நகர், திரேஸ்புரம், பூபால்ராயர்புரம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடி பயணிக்கின்றன. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறதுதூத்துக்குடியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 18.12.2015 மற்றும் 19.12.2015 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாள கன மழை பெய்வதற்கான (Isolated Heavy Rainfall) வாய்ப்புகள் இருக்குமென்று தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு அவ்வாறு கனமழை பெய்து வெள்ளம் சூழக்கூடிய நேரங்களில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது அருகில் உள்ள வரவேற்பு மையங்களை பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment