Friday, January 08, 2016
தூத்துகுடியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்– மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜமன்னார் (65). இவருடைய மனைவி உஷா. இவர்கள் தூத்துக்குடி குமாரபுரம் பகுதியில் மர நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை நடத்துவதற்காக ராஜமன்னார் தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முந்பு ராஜமன்னார் தனது நிறுவனத்தை குத்தகைக்கு விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதைக்கண்ட தூத்துக்குடி மாவட்ட மாப்பிள்ளையூரணி டேவீஸ்புரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பூபதி ராஜன் (35) என்பவர் ராஜமன்னார் நிறுவனத்தை நடத்த விரும்பினார். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பூபதி ராஜன் ரூ.10 லட்சத்தை ராஜமன்னாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பூபதி ராஜன் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமன்னார் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவே நிறுவனத்தை காலி செய்யுமாறு பூபதிராஜனிடம் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜன் ராஜமன்னாரிடம் தான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பூபதி ராஜன் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி மனுவை விசாரித்து வழக்குப்பதிவு செய்ய தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாளமுத்து நகர் விசாரித்து, பூபதி ராஜனிடம் மோசடியில் ஈடுபட்டதாக ராஜமன்னார், அவருடைய மனைவி உஷா(58), மகன் முகுந்தன் (35), மகள் காயத்ரி(37) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment