Saturday, January 02, 2016
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடி இறைச்சிக் கடைக்கு விற்ற 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி (70). பெட்டிகடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் ஆட்டை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் அவரது ஆடு கட்டப்பட்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சின்னதுரை (25), தாமோதர நகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் (22) ஆகிய இருவரும் பைக்கில் சென்று சேர்ந்து ஆட்டை திருடி இறைச்சி கடைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டையும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் வி...
0 comments:
Post a Comment