Saturday, January 02, 2016
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்கு வந்த கோவிந்தராஜ் தனது மனைவி சரண்யாதேவியுடன் நாசரேத்தை அடுத்த உடையார்குளம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் ஜோசப் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்தார்.
நேற்று மாலை கோவிந்தராஜூம், ஜோசப்பும் அந்த பகுதியில் உள்ள அய்யனார்குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜ் உடல் மீட்கப்பட்டது. கோவிந்தராஜிக்கும், சரண்யாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
0 comments:
Post a Comment