Monday, January 11, 2016

On Monday, January 11, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து தனலட்சுமி தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மெடிக்கல் நடத்தி வரும் இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.23 ஆயிரம், 3 கிராம் தங்க நகைகள் மற்றும் 8 சேலைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து முத்துக்குமார் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் எலிசபெத் (60). இவர் ஷேர் ஆட்டோவில் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வந்த போது அவர் கொண்டு வந்த பையில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் நடை பெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: