Friday, January 29, 2016
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய திட்டமான அம்மா மக்கள் சேவை மையம் தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டது. இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் விண்ணப்பங்கள் மூலம் தங்கள் குறைகளை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம்.
பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கைப்பேசியில் குறுந்தகவல் மூலம் பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பது தெரிவிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் தலைமை தாங்கினார்.
மண்டல உதவி ஆணையாளர்கள் (பொ) சரவணன், சுப்புலெட்சுமி, ரவீநாதன், (பொ)கல்யாண சுந்தரம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பெருமாள்தாய், மகாலெட்சுமி, சாந்தி, முப்பிடாதி, மெஜீலா, சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சர்மிளா அருள்தாஸ், பொன்ராஜ், சரவணன், ஆனந்தகுமார், சகாயராஜ், கமலக்கண்ணன், ஜெயக்குமார், தனராஜ், செல்வராஜ், தவசிவேல், மனோகர், சுடலைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநக...
0 comments:
Post a Comment