Saturday, March 28, 2015
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், சாயக் கழிவுநீரால் மாசுபட்ட நிலத்தடி நீரை எடுத்து வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தில் இரு பிரிண்டிங் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இங்கிருந்து, சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக் கழிவுநீரால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், ஆழ்துளை கிணறுகளிலும் மாசுபட்ட தண்ணீர் தான் வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விளைநிலங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment