Saturday, March 28, 2015
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், சாயக் கழிவுநீரால் மாசுபட்ட நிலத்தடி நீரை எடுத்து வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையத்தில் இரு பிரிண்டிங் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இங்கிருந்து, சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் சாயக் கழிவுநீரால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், ஆழ்துளை கிணறுகளிலும் மாசுபட்ட தண்ணீர் தான் வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விளைநிலங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment