Saturday, March 28, 2015
அவசர தேவையின்போது, குறுஞ்செய்தி மூலமாக காவல் துறையின் உதவியை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு திருப்பூர் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர காலங்களில், செல்லிடப்பேசி மூலமாக குறுந்தகவல்களை அனுப்பி காவல் துறையின் உதவி பெறும் வசதியை திருப்பூர் மாநகர காவல்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதன்படி, 94876 61100, 94897 71100 ஆகிய செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மூலமாக தேவையான உதவி அளிக்கப்படும்.
இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், குறுஞ்செய்தி மூலம் காவல் துறை உதவி பெறும் வசதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பூர்
மாநகரில் போலீஸார் வாகனத் தணிக்கை, ரோந்துப் பணியின்போது, குறுஞ்செய்தி மூலம் காவல்துறை உதவியை பெறும் வசதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வைத்துள்ள செல்லிடப்பேசியில், குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காவல் துறை செல்லிடப்பேசி எண்களையும் போலீஸார் பதிந்து தருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் திருப்பூர் வடக்குப் போலீஸார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment