Saturday, March 28, 2015
அவசர தேவையின்போது, குறுஞ்செய்தி மூலமாக காவல் துறையின் உதவியை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு திருப்பூர் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர காலங்களில், செல்லிடப்பேசி மூலமாக குறுந்தகவல்களை அனுப்பி காவல் துறையின் உதவி பெறும் வசதியை திருப்பூர் மாநகர காவல்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதன்படி, 94876 61100, 94897 71100 ஆகிய செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மூலமாக தேவையான உதவி அளிக்கப்படும்.
இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், குறுஞ்செய்தி மூலம் காவல் துறை உதவி பெறும் வசதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பூர்
மாநகரில் போலீஸார் வாகனத் தணிக்கை, ரோந்துப் பணியின்போது, குறுஞ்செய்தி மூலம் காவல்துறை உதவியை பெறும் வசதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வைத்துள்ள செல்லிடப்பேசியில், குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காவல் துறை செல்லிடப்பேசி எண்களையும் போலீஸார் பதிந்து தருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் திருப்பூர் வடக்குப் போலீஸார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
0 comments:
Post a Comment